கதை/கவிதை

அந்த ஜனவரி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அடித்த ‘அலார’ சத்தம் உறங்கிக் கொண்டிருந்த சங்கரின் காதில் நுழைந்து மூளைக்குள் அதிர்ந்தது. எரிச்சலோடு விழித்த அதே வேகத்தில் ஆமைபோல் தலையைப் போர்வையிலிருந்து நீட்டினான். ‘ஐந்து நிமிடம் கழித்து அழைக்கவும்’ என்று ஆங்கிலத்தில் கூகலிடம் சொல்லிவிட்டு, மீண்டும் பூனைபோல் சுருண்டு போர்வைக்குள் நுழைந்தான். மறுபேச்சின்றி கூகல் அலாரத்தை உறக்கநிலைக்கு உயர்த்தியது. சில நிமிடங்களில் “என்னங்க, ‘வாக்கிங்’ போக வேண்டாமா? எழுந்திருங்க!” அவன் மனைவி கமலாவின் குரல் கேட்டது. இதுவரை மனைவியின் பேச்சை நிறுத்த எந்தக் கருவியும் கண்டுபிடிக்கப்படாததால், வேறு வழியின்றி எழுந்தான் சங்கர்.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, உள்ளூர்க் கவிஞர்களின் கவிதை வரிகளையும் புகைப்படங்களையும் தாங்கிய பதாகைகள் சிராங்கூன் சாலையை அலங்கரிக்கின்றன.
“பார்த்து போங்க!” மனைவியின் அன்பான வேண்டுகோளை நினைத்தபடியே சாலையைக் கடந்தேன். இப்படித்தான் சில நாள்களுக்குமுன் சிராங்கூன் சாலையில் இருக்கும் கடையில் வீட்டுக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடையைப் போட்டேன்.